மனைவியின் சவாலை ஏற்று திருப்பதி மலை படிக்கட்டுகளில் மனைவியை தோள் மீது சுமந்து மலையேறிய கணவன்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கடியப்புலங்காவை சேர்ந்த சேர்ந்த லாரி உரிமையாளர் வரத வீர வெங்கட சத்யநாராயணா. அவருடைய மனைவி லாவண்யா.
இரண்டு பேருக்கும் 1998 ஆம் ஆண்டு திருமண நடைபெற்று இரண்டு மகள்கள் உள்ளார். அவர்கள் இரண்டு பேரும் மென் பொறியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
அவர்களில் ஒரு மகளுக்கு மகன் பிறந்த நிலையில் தங்களுக்கு பேரன் பிறந்தால் திருப்பதி மலைக்கு நடந்து படியேறி வருகிறோம் என்று வேண்டி கொண்டனர்.
இந்த நிலையில் திருப்பதிக்கு வந்த அவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக நடந்து படியேறி சென்றனர்.
அப்போது கணவன் வேகவேகமாக படியேறி செல்வதை பார்த்த மனைவி லாவண்யா, இது என்ன பிரமாதம் முடிந்தால் என்னை தூக்கி தோள் மேல் வைத்துக்கொண்டு படியேறுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டார்.
மனைவியின் சவாலை ஏற்ற கணவன் அவரை தோள் மேல் சுமந்து கொண்டு படி ஏற துவங்கினார். மனைவியை சுமந்து கொண்டு கணவன் ஒருவர் ஏழுமலையானை தரிசிக்க படியேறி செல்வதை பார்த்த மற்ற பக்தர்கள் அவர்களோடு செல்பி எடுத்துக்கொண்டனர்.
மேலும் பலர் வீடியோ, புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்தனர். தன்னை சுமந்து கொண்டு 70 படிகள் வரை கணவன் ஏறும் வரை அந்த சந்தோஷத்தை அனுபவித்த லாவண்யா அதன்பின் கணவன் தோல் மீது இருந்து இறங்கி விட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.