நள்ளிரவு போதை பங்கேற்ற பிரபல நடிகரின் மகள் உள்பட 144 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் போதை விருந்து நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று அதிகாலை 3 மணியளவில் சம்பந்தப்பட்ட ஓட்டலில் போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது, சுமார் 100க்கும் மேற்பட்டோர் போதைப் பொருட்களை பயன்படுத்திக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, போதை பார்ட்டியில் பங்கேற்று போதை மருந்துகளை உட்கொண்டிருந்ததாக 144 பேரையும் போலீசார் சுற்றி வளைத்தனர். அதில், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்று தமிழ் படத்தில் நடித்துள்ள நடிகை நிஹாரிகாவும் ஒருவராவார்.
இவர், தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சீரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் ஆவார்.
மேலும், பின்னணி பாடகரும், தெலுங்கு பிக் பாஸ் டைட்டில் வின்னரும் ராகுல், முன்னாள் டிஜிபியின் மகள், தெலுங்கு தேசம் எம்பியின் மகன் உட்பட ஏராளமான பிரபலங்கள் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.
இதுகுறித்து ஹைதராபாத் போலீஸார் கூறுகையில், “ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் தனிப்படை நடத்திய சோதனையில் பலர் சிக்கியுள்ளனர். இதில் 35 பேர் பெண்கள்,” என்று தெரிவித்தனர்.
தெலுங்கு பிரபலங்களில் முக்கிய புள்ளிகளின் வாரிசுகள் போதை பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.