ஐதராபாத்தில் ஆர்டர் செய்யப்பட்ட பிரியாணியில் பல்லி வால் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ஐதராபாத்தில் பிரபலமான மெரிடியன் உணவகத்தில் ஆர்டர் செய்யப்பட்ட மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருப்பதாக வெளியாகி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஐதராபாத்தில் பிரபலமான மற்றொரு உணவகமான டெக்கான் எலைட் உணவகத்தில் ஆர்டர் செய்யப்பட்ட பிரியாணியில் பல்லி வால் இருந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பிரியாணி ஆர்டர் செய்த வாடிக்கையாளர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வைரலான நிலையில், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் டெக்கான் எலைட் உணவகத்தில் ரெய்டு நடத்தினர். அப்போது, பிரியாணியின் மாதிரியை ஆய்வகத்தில் ஆய்வு செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.
இதனிடையே, இந்தப் பிரியாணியை சாப்பிட்ட 8 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வீடியோ வைரலான நிலையில், அது பல்லியின் வால் இல்லை என்றும், அது ஒருவகையான மீன் என்று ஓட்டல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.