ஐதராபாத்தில் ஆர்டர் செய்யப்பட்ட பிரியாணியில் பல்லி வால் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ஐதராபாத்தில் பிரபலமான மெரிடியன் உணவகத்தில் ஆர்டர் செய்யப்பட்ட மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருப்பதாக வெளியாகி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஐதராபாத்தில் பிரபலமான மற்றொரு உணவகமான டெக்கான் எலைட் உணவகத்தில் ஆர்டர் செய்யப்பட்ட பிரியாணியில் பல்லி வால் இருந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பிரியாணி ஆர்டர் செய்த வாடிக்கையாளர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வைரலான நிலையில், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் டெக்கான் எலைட் உணவகத்தில் ரெய்டு நடத்தினர். அப்போது, பிரியாணியின் மாதிரியை ஆய்வகத்தில் ஆய்வு செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.
இதனிடையே, இந்தப் பிரியாணியை சாப்பிட்ட 8 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வீடியோ வைரலான நிலையில், அது பல்லியின் வால் இல்லை என்றும், அது ஒருவகையான மீன் என்று ஓட்டல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.