தான் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார். அவர் நேற்று ரஜோரி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இதனை தொடந்து ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். சுற்றுப்பயணத்தின் 2-ம் நாளான இன்று பாரமுல்லா மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார்.
இந்நிலையில், தான் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மெகபூபா முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமைதி நிலை திரும்பிவிட்டது என உள்துறை அமைச்சர் தம்பட்டம் அடித்துவரும் நிலையில் பத்தன் பகுதியில் உள்ள எனது கட்சி தொண்டரில் இல்ல திருமண செல்ல நினைத்ததால் நான் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளேன்.
முன்னாள் முதலமைச்சரின் அடிப்படை உரிமை சுலபமாக ரத்து செய்யப்படும்போது, சாமானியர்களின் அவல நிலையை நினைத்துப்பார்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.