தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீசில்லா மாவட்டத்தை சேர்ந்த பிரணை குமார் என்பவர் ஸ்ரீ டிவி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.
தன்னுடைய சேனலுக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அவ்வப்போது அதிரடியாக ஏதாவது செய்யும் அவர் நேற்று மயில் இறைச்சியை சுவையாக சமைப்பது எப்படி என்று தலைப்பை போட்டு இறைச்சியை சமையல் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தேசிய பறவையான மயிலை வேட்டையாட நாட்டில் தடை அமலில் இருக்கும் நிலையில் அவர் வெளியிட்ட இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனவே அவரை உடனடியாக சென்று கைது செய்த போலீசார் அவர் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.
மேலும் அவர் வீடியோ வெளியிடுவதற்காக சமைத்த கறிக்குழம்பையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர்.
போலீஸ் விசாரணையில் நான் லைக், வியூஸ், சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவற்றிற்காகவே சுவையான முறையில் மயில் இறைச்சி சமைப்பது எப்படி என்று தலைப்பிட்டு வீடியோ பதிவு செய்தேன்.
ஆனால் அந்த வீடியோவில் நான் சமைத்தது கோழிக்கறி என்று கூறி இருக்கிறார்.
எனவே ஆய்வகத்தில் இருந்து கிடைக்க இருக்கும் முடிவுகளுக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.