டெல்லியில் மேற்குப் பகுதியில் உள்ள ஓல்ட் இந்திரா நகரில் ரவு ஸ்டடி சர்க்கிள் (Rau’s IAS Study Circle) என்ற ஐஏஎஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. மேலும், டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர்த் தேங்கி உள்ளது. இதன் விளைவாக நேற்று இரவு 7 மணியளவில் அந்த மையத்தில் சுமார் 30 மாணவர்கள் படித்துக் கொண்டிருந்த போது தரைத்தளத்திற்குள் மழை வெள்ளம் புகுந்தது.
அதன் பிறகு இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து அங்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். அங்கு தண்ணீரில் தத்தளித்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த மையத்தில் படித்து கொண்டிருந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர்.
இதை கண்டித்து நேற்று நள்ளிரவு முதல் பயிற்சி மைய கட்டிடத்திற்கு முன்னால் அங்கு படித்து வரும் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்த டெல்லி மாநகராட்சியைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை அடைப்பை அப்புறப்படுத்தாது தான் என்று கட்டடத்துக்குள் வெள்ளம் வந்ததற்கான காரணம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவரும், நாடுளுமன்ற எம்பியான ராகுல் காந்தி இன்று அவரது எக்ஸ் தளத்தில் இந்த சம்பவத்தை கண்டித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “டெல்லியில் உள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில் தண்ணீர் தேங்கியதால் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் உயிரிழந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதே போல சில நாட்களுக்கு முன், மழையின் போது மின்சாரம் தாக்கி ஒரு மாணவர் இறந்தார். இந்த கட்டிடத்தில் உள்கட்டமைப்பின் இந்த சரிவு அமைப்பின் ஒருங்கிணைந்த தோல்வியாகும். பாதுகாப்பற்ற கட்டுமானம், மோசமான நகரத் திட்டமிடல் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மை போன்றவற்றால் சாதாரண குடிமக்கள் தங்கள் உயிரை இழப்பதன் மூலம் அதற்கு விலை கொடுத்து வருகின்றனர்.
பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும் மேலும் அது அரசாங்கத்தின் பொறுப்பும் ஆகும்” என்று ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.