டெல்லியில் மேற்குப் பகுதியில் உள்ள ஓல்ட் இந்திரா நகரில் ரவு ஸ்டடி சர்க்கிள் (Rau’s IAS Study Circle) என்ற ஐஏஎஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. மேலும், டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர்த் தேங்கி உள்ளது. இதன் விளைவாக நேற்று இரவு 7 மணியளவில் அந்த மையத்தில் சுமார் 30 மாணவர்கள் படித்துக் கொண்டிருந்த போது தரைத்தளத்திற்குள் மழை வெள்ளம் புகுந்தது.
அதன் பிறகு இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து அங்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். அங்கு தண்ணீரில் தத்தளித்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த மையத்தில் படித்து கொண்டிருந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர்.
இதை கண்டித்து நேற்று நள்ளிரவு முதல் பயிற்சி மைய கட்டிடத்திற்கு முன்னால் அங்கு படித்து வரும் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்த டெல்லி மாநகராட்சியைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை அடைப்பை அப்புறப்படுத்தாது தான் என்று கட்டடத்துக்குள் வெள்ளம் வந்ததற்கான காரணம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவரும், நாடுளுமன்ற எம்பியான ராகுல் காந்தி இன்று அவரது எக்ஸ் தளத்தில் இந்த சம்பவத்தை கண்டித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “டெல்லியில் உள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில் தண்ணீர் தேங்கியதால் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் உயிரிழந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதே போல சில நாட்களுக்கு முன், மழையின் போது மின்சாரம் தாக்கி ஒரு மாணவர் இறந்தார். இந்த கட்டிடத்தில் உள்கட்டமைப்பின் இந்த சரிவு அமைப்பின் ஒருங்கிணைந்த தோல்வியாகும். பாதுகாப்பற்ற கட்டுமானம், மோசமான நகரத் திட்டமிடல் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மை போன்றவற்றால் சாதாரண குடிமக்கள் தங்கள் உயிரை இழப்பதன் மூலம் அதற்கு விலை கொடுத்து வருகின்றனர்.
பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும் மேலும் அது அரசாங்கத்தின் பொறுப்பும் ஆகும்” என்று ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார்.
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
This website uses cookies.