ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்து மாணவர்கள் பலி.. நீதி கேட்கும் ராகுல் காந்தி!!

டெல்லியில் மேற்குப் பகுதியில் உள்ள ஓல்ட் இந்திரா நகரில் ரவு ஸ்டடி சர்க்கிள் (Rau’s IAS Study Circle) என்ற ஐஏஎஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. மேலும், டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர்த் தேங்கி உள்ளது. இதன் விளைவாக நேற்று இரவு 7 மணியளவில் அந்த மையத்தில் சுமார் 30 மாணவர்கள் படித்துக் கொண்டிருந்த போது தரைத்தளத்திற்குள் மழை வெள்ளம் புகுந்தது.

அதன் பிறகு இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து அங்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். அங்கு தண்ணீரில் தத்தளித்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த மையத்தில் படித்து கொண்டிருந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர்.

இதை கண்டித்து நேற்று நள்ளிரவு முதல் பயிற்சி மைய கட்டிடத்திற்கு முன்னால் அங்கு படித்து வரும் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்த டெல்லி மாநகராட்சியைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை அடைப்பை அப்புறப்படுத்தாது தான் என்று கட்டடத்துக்குள் வெள்ளம் வந்ததற்கான காரணம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவரும், நாடுளுமன்ற எம்பியான ராகுல் காந்தி இன்று அவரது எக்ஸ் தளத்தில் இந்த சம்பவத்தை கண்டித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “டெல்லியில் உள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில் தண்ணீர் தேங்கியதால் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் உயிரிழந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதே போல சில நாட்களுக்கு முன், மழையின் போது மின்சாரம் தாக்கி ஒரு மாணவர் இறந்தார். இந்த கட்டிடத்தில் உள்கட்டமைப்பின் இந்த சரிவு அமைப்பின் ஒருங்கிணைந்த தோல்வியாகும். பாதுகாப்பற்ற கட்டுமானம், மோசமான நகரத் திட்டமிடல் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மை போன்றவற்றால் சாதாரண குடிமக்கள் தங்கள் உயிரை இழப்பதன் மூலம் அதற்கு விலை கொடுத்து வருகின்றனர்.

பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும் மேலும் அது அரசாங்கத்தின் பொறுப்பும் ஆகும்” என்று ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

4 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

4 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

4 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

5 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

5 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

5 hours ago

This website uses cookies.