காங்., ஆட்சிக்கு வந்தால் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை.. விவசாயிகளிடம் உத்தரவாதம் அளித்த ராகுல் காந்தி!

காங்., ஆட்சிக்கு வந்தால் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை.. விவசாயிகளிடம் உத்தரவாதம் அளித்த ராகுல் காந்தி!

வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், மத்திய அரசு உத்தரவாதம் கொடுத்த நிலையில் பின்னர் திரும்ப பெற்றனர்.

எனினும், 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மத்திய அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறி மீண்டும் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

விவசாயிகள் தங்களின் பேரணியை பஞ்சாப்பின் ஃபதேகர் சாஹேப்பில் இருந்து தொடங்கினர். விவசாயிகளின் இந்த பேரணி பஞ்சாப் – ஹரியானா, ஹரியானா- டெல்லி எல்லைகளைக் கடந்து டெல்லியை வந்து அடைய வேண்டும் என திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால், விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுக்க டெல்லி எல்லையில், சிமெண்ட் தடுப்புகள், முள்படுக்கை, முள்வேலி போன்றவற்றைக் கொண்டு பாதைகளை போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.

டெல்லி அருகே உள்ள பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பே டெல்லிக்கு சென்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 2000 டிராக்டர்கள், உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து 500 டிராக்டர்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 200 டிராக்டர்கள் என சுமார் 3000 டிராக்டர்களுடன் டெல்லி எல்லைகளை விவசாயிகள் சுற்றிவளைத்து உள்ளனர்.

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் மட்டுமின்றி தென் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் இதில் பங்கேற்க டெல்லி சென்று உள்ளார்கள்.

மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் விவசாயிகள் நடத்தும் இந்த போராட்டம் அரசியல் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. இந்நிலையில் பஞ்சாப்- ஹரியானா ஷம்பு எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசினர்.

இதனால் விவசாயிகள் சிதறி ஓடினர். விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி மேஜர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:- விவசாய சகோதரர்களே இன்று வரலாற்றுப்பூர்வமான நாள்! சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின் படி ஒவ்வொரு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு 15 கோடி விவசாய குடும்பங்களை வளமாக்கும். நீதிக்கான காங்கிரசின் பாதையில் இதுதான் முதல் உத்தரவாதம்” என்று பதிவிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

12 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

13 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

13 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

15 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

16 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

17 hours ago

This website uses cookies.