ஆந்திரா : விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஐஐடி மாணவிகள் இரண்டு நாட்களாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் இடுபுலபயா ராஜீவ் காந்தி பல்கலைக்கழக கல்லூரி ஐஐடி மாணவிகள் விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இரண்டு நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழைய விடுதி கட்டிடம், உணவு , நீர் மற்றும் கழிப்பிட வசதி போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து தரக்கோரி இரண்டு நாட்களாக விடுதி வாயிலில் அமர்ந்து இரவு பகல் பாராமல் போராடி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு பல்கலைக்கழக துணைவேந்தர் செஞ்சு ரெட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் தாசில்தார் ஆகியோர் மாணவிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஒரு நாள் கால அவகாசம் தேவை என துணைவேந்தர் செஞ்சு ரெட்டி தெரிவித்த நிலையில் மாணவிகள் ஏற்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
This website uses cookies.