திருப்பதி மலையில் உள்ள தங்கும் அறைகளில் 172 அறைகளின் வாடகையை தேவஸ்தான நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன் அதிகரித்தது.
தேவஸ்தானத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று திருப்பதி மலையில் செய்தியாளர்களுடன் பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, திருப்பதி மலையில் சுமார் 7500 அறைகள் உள்ளன.
அவற்றில் 4 ஆயிரம் அறைகள் சாதாரண பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. மீதி உள்ள மூன்றாயிரத்து ஐநூறு அறைகள் விஐபி பக்தர்கள் மற்றும் பொருளாதார வசதி படைத்த பக்தர்கள் ஆகியோரின் பயன்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
நாராயணகிரி கட்டிட வளாகத்தில் உள்ள அறைகள் உட்பட 172 அறைகள் சமீபத்தில் 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டன. அவற்றில் தற்போது வாட்டர் ஹீட்டர், தரமான கட்டில், மெத்தை, ஏர் கண்டிஷன் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே அவற்றின் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு சிலர் தேவஸ்தானத்தின் இந்த முடிவை தவறு என்று விமர்சித்து வருகின்றனர் என்று அப்போது கூறினார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.