தமிழுக்காக, தமிழர்களுக்காக, தமிழ் மொழிக்காக இருப்பதாக மார்தட்டி கொள்ளும் திமுக, கூட்டணி கட்சியினரின் கூட்டத்தில் ஹிந்தி தேசிய மொழி என்றும், மற்ற மாநிலத்தவர்களை அவதூறு செய்தும் அமைதி காத்தது ஏன்? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லியில் நேற்று நடந்த “INDI கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் 28 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டிஆர் பாலு எம்பி உள்ளிட்டோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் ஜேடியூ தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் இந்தி மொழியில் பேசத் தொடங்கினார். அப்போது, திமுக எம்பி டிஆர் பாலு, நிதிஷ்குமார் இந்தி மொழியில் பேசுவதை மொழிபெயர்த்து சொல்ல வேண்டும், என்று வலியுறுத்தினார். இதையடுத்து, ஜேடியூ கட்சி நிர்வாகி மனோஜ் ஜா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொண்டிருந்தார்.
ஆனால் நிதிஷ்குமார் கடும் கோபத்துடன், இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றும், ஆகையால் திமுக தலைவர்கள் இந்தி மொழியை கற்க வேண்டும் என ஆவேசத்துடன் கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும், தனது பேச்சை ஆங்கிலத்தை மொழி பெயர்ப்பதை உடனே நிறுத்துமாறு கூறியதாக தெரிகிறது. இது ‘INDI’ கூட்டணி கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்திக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் திமுக, தனது “INDI” கூட்டணியில் இந்திக்கு எதிராக பேசாமல், நிதிஷ்குமாரின் பேச்சால் அடங்கி போயிருப்பது கடும் விமர்சனங்களை எழச் செய்துள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள X தளப்பதிவில், “ஹிந்தி, இந்தியாவின் தேசிய மொழி என்கிறார் INDI கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான நிதிஷ் குமார் அவர்கள். ஹிந்தியை தூக்கிப்பிடித்தும், மற்ற மொழிகளை அவமானப்படுத்தியும் அந்த கூட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்டிருக்கிறது திமுக. தமிழுக்காக, தமிழர்களுக்காக, தமிழ் மொழிக்காக இருப்பதாக மார்தட்டி கொள்ளும் திமுக, கூட்டணி கூட்டத்தில் ஹிந்தி தேசிய மொழி என்றும், மற்ற மாநிலத்தவர்களை அவதூறு செய்தும் அமைதி காத்தது ஏன்?
தமிழை விட ஹிந்தி உயர்ந்தது என்றெண்ணி ஹிந்திக்கு அடிமையாகி விட்டதா திமுக ? கூட்டணிக்காக தமிழ் மொழியை அடகு வைக்க துணிந்து விட்டதா திமுக? உண்மையிலேயே தமிழுக்காக எதையும் செய்ய தயாராயிருக்குமானால், இந்நேரம் INDI கூட்டணியை விட்டு வெளியேறியிருக்கும் அல்லது நிதிஷ் குமார் கட்சியை INDI கூட்டணியை விட்டு வெளியேற்ற முனைந்திருக்கும். ஆனால், ஹிந்திக்கு குடை பிடித்து, சாமரம் வீசி, தமிழை புறந்தள்ளும் திமுகவிற்கு இனியும் தமிழ் குறித்து பேசும் தகுதி இல்லை,” எனக் கூறினார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.