கீவ்: உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ரஷ்ய படைகள் இன்று காலை நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ம் தேதி போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.
ராணுவ நிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்ய விமானப்படை கொத்துக் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இன்று காலை கார்கிவ் பகுதியில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தின. இதுகுறித்து வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, இந்த ஏவுகணை தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹவேரி சாலகிரியை சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா என்பவர் விடுதியில் இருந்து ரயில் நிலையத்திற்கு சென்றபோது இந்த தாக்குதலில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த இந்திய மாணவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன் சேகரப்பா கார்கிவ் நகரில் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்துள்ளார். மாணவர் உயிரிழந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.