இந்தியாவின் சூப்பர் சோனிக் ஏவுகணை திடீரென பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததாக அந்நாட்டு அரசு விளக்கம் கேட்டுள்ளது.
உலக நாடுகளே அச்சுறுத்தும் வகையில் உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடந்து வருகிறது. மூன்று கட்டமாக நடந்த பேச்சுவார்தை தோல்வியில் முடிந்த நிலையில் ரஷ்யா தாக்குதலில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த போருக்கு மத்தியயில் இந்தியாவின் சூப்பர் சோனிக் ஏவுகணை ஒன்று கடந்த மார்ச் 9ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்துள்ளதாக பாக் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து பேசிய பாகிஸ்தான் விமானப்படை மேஜர் ஜெனரல் பாபர் இஃப்திகார், கடந்த புதன்கிழமை மாலை 6.50 மணிக்கு இந்தியாவில் ஹிரியானா மாநிலம் சிறுசா நகரத்தில் இருந்து ஏவப்பட்டஇஅதிவேக ஏவுகணை பாக் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மியா சானு என்ற பகுதியில் விழுந்திருப்பதாவும், பாக் ராணுவம் மேற்கொண்ட ஆய்வில் அது சூப்பர் சோனிக் வகை ஏவுகணை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஏவுகணை விழுந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், தனியார் சொத்துக்கள் சில சேதமாகியுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் பாக்.,கில் விழுந்த ஏவுகணையின் பாகங்களை பறிமுதல் செய்து சோதனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
இது குறித்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சக்ம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் 9ம் தேதி பராமரிப்பு பணியின் போது தவறுதலாக ஏவப்பட்ட ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் உயிர்தேசம் ஏற்படவில்லை என்றும், உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையேயான 2005ம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி, ஏவுகணை சோதனையில் ஈடுபடுவதற்கு குறைந்தது 3 நாட்களுக்கு முன்னர் ஏவுகணை குறித்த முழு தகவல்களையும் பரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடத்தக்கது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.