இந்தியாவின் சூப்பர் சோனிக் ஏவுகணை திடீரென பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததாக அந்நாட்டு அரசு விளக்கம் கேட்டுள்ளது.
உலக நாடுகளே அச்சுறுத்தும் வகையில் உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடந்து வருகிறது. மூன்று கட்டமாக நடந்த பேச்சுவார்தை தோல்வியில் முடிந்த நிலையில் ரஷ்யா தாக்குதலில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த போருக்கு மத்தியயில் இந்தியாவின் சூப்பர் சோனிக் ஏவுகணை ஒன்று கடந்த மார்ச் 9ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்துள்ளதாக பாக் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து பேசிய பாகிஸ்தான் விமானப்படை மேஜர் ஜெனரல் பாபர் இஃப்திகார், கடந்த புதன்கிழமை மாலை 6.50 மணிக்கு இந்தியாவில் ஹிரியானா மாநிலம் சிறுசா நகரத்தில் இருந்து ஏவப்பட்டஇஅதிவேக ஏவுகணை பாக் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மியா சானு என்ற பகுதியில் விழுந்திருப்பதாவும், பாக் ராணுவம் மேற்கொண்ட ஆய்வில் அது சூப்பர் சோனிக் வகை ஏவுகணை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஏவுகணை விழுந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், தனியார் சொத்துக்கள் சில சேதமாகியுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் பாக்.,கில் விழுந்த ஏவுகணையின் பாகங்களை பறிமுதல் செய்து சோதனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
இது குறித்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சக்ம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் 9ம் தேதி பராமரிப்பு பணியின் போது தவறுதலாக ஏவப்பட்ட ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் உயிர்தேசம் ஏற்படவில்லை என்றும், உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையேயான 2005ம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி, ஏவுகணை சோதனையில் ஈடுபடுவதற்கு குறைந்தது 3 நாட்களுக்கு முன்னர் ஏவுகணை குறித்த முழு தகவல்களையும் பரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
This website uses cookies.