ஆந்திரா : காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறிக் கொள்ளும் நிலையில் புகார் அளிக்க வந்தவரை தகாத வார்த்தைகளால் பேசிய எஸ்.ஐ தாக்கிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் சிலமஞ்சரி மண்டலம் சஞ்சீவிராயனி கிராமத்தை சேர்ந்தவர் வேணு. மாற்றுத்திறனாளியான இவருடைய தாய் பத்மாவதிக்கு அரசு வழங்கும் உதவித்தொகை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த நிலையிலும் வழங்கப்படவில்லை என ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் தாமோதர் ரெட்டியிடம் புகார் தெரிவித்தார்.
இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் தாமோதர் ரெட்டி சிலமஞ்சரி காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்த நிலையில் வேணுவும் புகார் அளிக்க சென்றார்.
அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ ரங்க யாதவ் புகார் கொடுக்க வந்த வேணுவை தகாத வார்த்தைகளால் பேசி கடுமையாக தாக்கினார்.
போலீஸ் அத்துமீறல் தொடர்பான இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் நிலையில் காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறி கொண்டு அதற்கு மாறாக நடத்தை கொண்ட எஸ்.ஐ ரங்க யாதவ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பட்டுள்ளது.
புகார் அளிக்கச் சென்ற நபரை போலீசார் தாக்கிய சம்பவத்தால் சிலமஞ்சரி பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
This website uses cookies.