பொதுவெளியில் மாறிமாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து மோதிக் கொண்ட பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது கர்நாடகா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கர்நாடகாவின் கைவினைப் பொருட்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநராக இருப்பவர் ரூபா ஐபிஎஸ். அண்மையில் இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், கர்நாடகா அரசின் அறநிலையத்துறை ஆணையர் ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பல்வேறு ஊழல்களில் ரோகிணிக்கு பங்கிருப்பதாக கூறிய அவர், கோலார் பகுதியில் உயிரிழந்த ஐஏஎஸ் அதிகாரி ரவியின் இறப்பிற்கும், ரோகிணிக்கும் தொடர்பிருக்கிறதா என்று கொளுத்தி போட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், ரோகிணி சிந்தூரியின் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த ரூபா, ரோகிணி சிந்தூரி கடந்த 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் 3 ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் தனது கவர்ச்சி புகைப்படங்களை அனுப்பி இருப்பதாகவும், இது தொடர்பாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் புகார் அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபாவின் இந்தக் குற்றச்சாட்டுக்களால் கடுப்பான ரோகிணி, ரூபா பகிர்ந்த புகைப்படங்கள் அனைத்தும் எனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், நான் எந்தெந்த அதிகாரிகளுக்கு இந்த புகைப்படங்களை அனுப்பினேன் என பெயரை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பெண் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் மாறிமாறி சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பொதுவெளியில் சண்டையிட்ட குற்றத்திற்காக ரோகிணி ஐஏஎஸ் மற்றும் ரூபா ஐபிஎஸ் மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.