‘பதஞ்சலி’ மருந்துகளுக்கு தடையா? காங்கிரஸ் எம்பி அளித்த புகார் : ஆணையம் போட்ட அதிரடி உத்தரவு!!

யோகா குருவும், பாஜகவின் அனுதாபியாகவும் அறியப்படும் பாபா ராம்தேவ் சார்பில் தொடங்கப்பட்டது பதஞ்சலி நிறுவனம்.

பல்வேறு நோய்களுக்கான லேகியம், டானிக் போன்ற மருந்துகளையும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோக பொருட்களையும் பதஞ்சலி தயாரித்து விற்பனை செய்தது .

கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிந்தைய காலக்கட்டங்களில் நாடு முழுவதும் இயற்கை உணவுகள் மீது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அந்த சமயத்தில், தாங்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் இயற்கை மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படுவதாக பதஞ்சலி பெரிய அளவில் விளம்பரங்களை செய்தது.

இதனால் மக்களின் கவனம் பதஞ்சலி நிறுவனத்தின் மீது விழ ஆரம்பித்தது. அந்த சமயம், பல முன்னணி நிறுவனங்களை லாபத்தில் ஓரம்கட்ட தொடங்கியது பதஞ்சலி.

மேலம் பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துகள் பல்வேறு நோய்களை தீர்ப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. குறிப்பாக ‘மருந்துகள் மற்றும் அற்புத நிவாரணிகள் தடை சட்டம் 1954’க்கு புறம்பாக சில விளம்பரங்கள் உள்ளதாக கேரளாவை சேர்ந்த மருத்துவர் கே.வி. பாலு என்பவர் புகார் அளிததார்.

ஆனால் மத்திய ஆயுஷ் துறை அமைச்சகம் இந்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, சட்ட விதி 170 தொடர்பான வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என ஆயுஷ் அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மருத்துவர் பாலு இந்த விவகாரத்தை விடவில்லை, தான் சட்டம் 1954ஐ தான் குறிப்பிட்டேனே தவிர சட்ட விதி 170ஐ தான் குறிப்பிடவே இல்லை என கூறியிருந்தார்.

ஆனால் மருத்துவரின் புகார் குறித்து ஆயுஷ் அமைச்சகம் கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பதஞ்சலி நிறுவனத்தின் மீது மருத்துவர் பாலு அளித்த புகாரை போலவே ஒரு புகார் மனு அளித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில் மருந்துகள் மற்றும் அற்புத நிவாரணிகள் தடை சட்டம் 1954ஐ மீறிய பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உத்தகண்ட் அரசின் உரிமம் வழங்கும் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது

இதனால் மீண்டும் பதஞ்சலி நிறுவனத்தின் மீதான புகார் தூசு தட்டப்பட்டுள்ளது. சட்ட மீறல் உறுதிப்படுத்தப்பட்டால் தடை செய்யப்படும் என கூறப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

8 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

10 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

11 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

12 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

12 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

13 hours ago

This website uses cookies.