நான் இஸ்ரோ தலைவராக பதவி வகிப்பதை சிவன் தடுக்க முயற்சி? சுயசரிதையில் சோம்நாத் பரபரப்பு குற்றச்சாட்டு!!

நான் இஸ்ரோ தலைவராக பதவி வகிப்பதை சிவன் தடுக்க முயற்சி? சுயசரிதையில் சோம்நாத் பரபரப்பு குற்றச்சாட்டு!!

இஸ்ரோ தலைவராக இருப்பவர் கேரளத்தை சேர்ந்த சோம்நாத். இவருக்கு முன்பு தலைவராக இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த கே சிவன் ஆவார். இவரது பதவிக்காலத்தில் சந்திரயான் 2 திட்டமானது நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்டது.

அதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது நிலவின் தரை பரப்பில் மோதி சிதறியது. இதனால் இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனாலும் நிலவின் தென் துருவத்திற்கு செல்லும் அளவுக்கு குறைந்த செலவில் செயற்கைகோள் செலுத்தியது இஸ்ரோவுக்கு பெருமையை சேர்த்தது.

இந்த நிலையில் நிலவு குடிச்ச சிங்கங்கள் என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார் தற்போதைய இஸ்ரோ தலைவர் சோம்நாத். இவர் தான் எழுதிய புத்தகத்தில்தான் சிவன் குறித்து பல்வேறு கருத்துகளை கூறியுள்ளார்.

தனது சுயசரிதை புத்தகத்தில் சோம்நாத் கூறியிருப்பதாவது: எனக்கும் சிவனுக்கும் 60 வயது நிறைவடைந்தவுடன் எங்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு இஸ்ரோ தலைவராக இருந்த ஏ.எஸ்.கிரண்குமார் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பிறகு எங்கள் இருவரின் பெயர்களும் இஸ்ரோ தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. எனக்கு கிடைக்கும் என நான் நம்பியிருந்த நிலையில் அந்த பதவி சிவனுக்கு கொடுக்கப்பட்டது.

இஸ்ரோ தலைவரான பிறகு சிவன், அதற்கு முன்பு வகித்து வந்த விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் பதவியை விட்டுக் கொடுக்கவில்லை.

விக்ரம் சாராபாய் பதவி குறித்து சிவனிடம் நான் கேட்டும் அவர் பதில் ஏதும் சொல்லாமல் மழுப்பிவிட்டார். அந்த விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் பி.என்.சுரேஷின் தலையீட்டை அடுத்து 6 மாதங்கள் கழித்து அந்த பதவிக்கு நான் நியமிக்கப்பட்டேன். இஸ்ரோ தலைவராக 3 ஆண்டுகள் சேவைகளை செய்துவிட்டு ஓய்வு எடுப்பதற்கு பதிலாக சிவன் தனது பதவியை நீட்டிக்கவே முயற்சித்தார்.

என்னை தலைவராக்கக் கூடாது என்பதற்காகவே விண்வெளி ஆணையத்தில் யாரை தலைவராக்குவது என்ற ஆலோசனைக்கு யு.ஆர். ராவ் விண்வெளி மையத்தின் இயக்குநரை விட்டு தேர்வு செய்தார்கள் என நான் கருதுகிறேன்.

இதைத் தொடர்ந்து சந்திரயான் 2 நிலவில் செலுத்திய போது பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க என்னை அழைத்து செல்லாமல் ஒதுக்கியே வைத்தனர். சந்திரயான் 2 தோல்வி அடைந்ததற்கு நிறைய சோதனைகளை செய்யாததே காரணம், கிரண்குமார் தலைவராக இருந்த போது சந்திரயான் 2 திட்டத்தில் சிவனை நிறைய மாற்றங்களை செய்திருந்தார். அளவுக்கு அதிகமான விளம்பரமும் சந்திரயான் 2 திட்டத்தை கடுமையாக பாதித்திருந்தது.

சந்திரயான் 3 வெற்றி அடைந்த போது பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவிக்க தனிப்பட்ட முறையில் வந்தது எனது மிகப் பெரிய திருப்தியாகும். சந்திரயான் 2 திட்டம் தோல்வி அடைந்தது ஏன் என்பதற்கான முக்கிய 5 காரணங்களை விசாரணை குழு கண்டுபிடித்துள்ளது.

சாப்ட்வேரில் தவறுகள், நிறைய பிரச்சினையை உருவாக்கியது. தவறான அல்காரித்ததால் எல்லாம் நடந்தன. இந்த தவறுகள் எல்லாம் சந்திரயான் 3 யில் நடக்கக் கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன் என சோம்நாத் எழுதியுள்ளார்.

இதுகுறித்து கே சிவனிடம் கேட்ட போது, இஸ்ரோ தலைவர் சோம்நாத் புத்தகத்தில் என்ன எழுதியிருந்தார் என்பதை நான் இன்னும் பார்க்கவில்லை, எனவே இதுகுறித்து நான் எந்த கருத்தையும் கூற முடியாது என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

14 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

15 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

16 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

16 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

16 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

18 hours ago

This website uses cookies.