இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாலஸ்தீனத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு கூட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி வரும் சம்பவம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நில உரிமை மற்றும் மரியாதைக்காக போராடும் பாலஸ்தீனிய மக்களுக்கு எப்போது ஆதரவு அளிப்பதாகவும், உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
முன்னதாக, இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியதும், இந்திய ஆரசு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தது. இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டு இருந்த பதிவில், ‘இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் துணையாக நிற்கிறோம்,’ என தெரிவித்தார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.