இங்கு எரிக்கப்படுவது பிணம் அல்ல : ரூ.850 கோடி மதிப்புள்ள 200 டன் கஞ்சாவை அழித்த போலீசார்!!

ஆந்திரா : ஆபரேஷன் பரிவர்த்தனா மூலம் 850 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 டன் கஞ்சா பயிர்களுக்கு தீ வைத்து அழித்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 11 மண்டலங்கள் மற்றும் ஒடிசாவில் உள்ள 23 மாவட்டங்கள் ஆகியவற்றில் பெருமளவில் கஞ்சா சாகுபடி விவசாயம் போல் நடைபெற்று வருகிறது.

நக்சலைட்டுகள் நடமாட்டம் மிகுந்த மலைப்பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் கஞ்சா சாகுபடி நடைபெறுவதால் அந்த பகுதிகளுக்கு போலீசார் சென்று கஞ்சா பயிரிடும் நபர்களை கைது செய்வது, கஞ்சா தோட்டங்களை அளிப்பது ஆகிய நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட இயலாத நிலை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் இரண்டு மாநிலங்களிலிருந்தும் நாடு முழுவதும் கஞ்சா விற்பனை நடைபெறுவதால் அவற்றை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று மற்ற மாநிலங்கள் ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.

எனவே ஆந்திர மாநில போலீசார் ஆபரேஷன் பரிவர்த்தனா என்ற பெயரில் கடந்த ஓராண்டில் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 7 ஆயிரத்து 552 ஏக்கர் கஞ்சா தோட்டங்களை அழித்தனர். இதற்காக கஞ்சா பயிரிடப்பட்டுள்ள இடங்களை கண்டுபிடிக்க டுரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் கஞ்சா பயிர் செய்து அவற்றை கடத்தியது ஆகிய குற்றங்களுக்காக 1500 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தவிர கடத்தலின் போது 200 டன் எடையும் சுமார் 850 கோடி ரூபாய் மதிப்பும் கொண்ட கஞ்சாவை கைப்பற்றிய ஆந்திர போலீசார் அவற்றை விசாகப்பட்டினம் அருகே உள்ள கோடூரூ மைதானம் ஒன்றில் தீ வைத்து எரித்தனர்.

ஆந்திர மாநில டிஜிபி கௌதம் சவாங் 200 டன் கஞ்சாவுக்கு தீ வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கஞ்சா பயிரிடுவதை தவிர்க்குமாறு விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மலைவாழ் மக்களுக்கு பல்வேறு முறை வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம்.

ஆனாலும் கஞ்சா பயிர் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கஞ்சா பயிர் செய்பவர்கள், அவற்றை கடத்துபவர்கள் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

5 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

7 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

7 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

8 hours ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

9 hours ago

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

10 hours ago

This website uses cookies.