இந்திய முகாம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தற்கொலைப்படை தாக்குதல் ; 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம்…!!

Author: Babu Lakshmanan
11 August 2022, 9:19 am

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

ரஜோரி மாவட்டத்தின் பார்கல் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் ராணுவ முகாம் அமைத்து பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ராணுவ முகாம் எல்லையை கடந்து உள்ளே ஊடுருவ சிலர் முயற்சி செய்துள்ளனர்.

அப்போது, அவர் நிற்குமாறு கூறிய பாதுகாப்பு படையினர் மீது அந்த நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு, பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, தர்ஹால் காவல் நிலைய பகுதியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டனர்.

ஆனால், இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீரென தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலிவ் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில், எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஜம்மு மண்டலத்திற்கான ஏ.டி.ஜி.பி. முகேஷ் சிங் உறுதிப்படுத்தி உள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ