தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தில் உள்ள போனக்கல் கிராமத்தில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றும் ஆரம்பப் பள்ளி உள்ளது.
அந்த பள்ளியில் 32 மாணவர்கள் மட்டுமே படித்து வந்த நிலையில் அங்கு சீனிவாஸ் என்பவர் ஆசிரியர் வேலைக்கு சென்றார்.
மாணவர்கள் மீது அவருக்கு இருந்த அக்கறை,பெற்றோரிடம் இருந்த பிணைப்பு ஆகியவற்றை தொடர்ந்து அந்த பள்ளியின் மாணவர்கள் வருகை 250 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில் தெலுங்கானா மாநில அரசு அவரை அதே பகுதியில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அக்கபெல்லிகூடா கிராமத்தில் இருக்கும் ஆரம்பப் பள்ளிக்கு ஆசிரியராக பணியிட மாற்றம் செய்தது.
இதனை அறிந்த மாணவ, மாணவிகள் அவர்களின் பெற்றோர் ஆகியோர் அவரை செல்ல வேண்டாம் என்று வற்புறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் அரசு உத்தரவை மீரா இயலாது என்று கூறிய ஸ்ரீநிவாஸ் பணியிட மாற்றத்தின் அடிப்படையில் அந்த பள்ளிக்கு சென்று விட்டார்.
இதனை தொடர்ந்து அந்த பள்ளியில் படித்து வந்த 250 மாணவ மாணவியர்களில் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் டிசி வாங்கிக்கொண்டு தாங்கள் கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அக்கபெல்லிகூடா கிராமத்தில் சீனிவாஸ் ஆசிரியராக பணியாற்றும் பள்ளிக்குச் சென்று சேர்ந்துவிட்டனர். இதனால் மீண்டும் போனக்கல் கிராம ஆரம்ப பள்ளியில் மாணவர்கள் வருகை குறைந்துவிட்டது.
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
This website uses cookies.