அகமதாபாத்: அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 38 பேருக்கு தூக்கு தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் அகமாதாபாத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடர் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து 21 இடங்களில் வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.
இந்த தொடர் தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டனர். 240 பேர் படுகாயம் அடைந்தனர். வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் நடமாடும் பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 77 பேர் குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம்சாட்டப்பட்ட 77 பேரில் 49 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். 26 பேர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகள் 49 பேரில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தும், எஞ்சிய 11 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.