விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரும், நடிகருமான சிவராஜ் குமாரின் மனைவி கீதா கர்நாடகா காங்கிரஸ் கட்சியில் இணைந்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட திரையுலகின் முக்கியமான நடிகர் ராஜ்குமார். இவரது மூத்த மகன் சிவராஜ் குமார். இவரும் திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மறைந்த நடிகர் ராஜ்குமாருக்கு பலமுறை அரசியல் வாய்ப்புகள் எட்டிப்பார்த்தாலும், ஒருபோதும் அவர் அரசியலில் நுழையவில்லை.
இவரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தி வனத்தில் வைத்து இருந்தபோது, கர்நாடகா, தமிழ்நாடு அரசுகள் ஆடிப் போயின. தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், பத்திரமாக ராஜ்குமார் மீட்கப்பட்டார். அவர் மறைந்து இருந்தாலும், இன்றும் கன்னட உலகம் அவரைப் போற்றுகிறது.
இதுவரையில் அவரது குடும்பத்தினர் அரசியலில் கால் பதிக்காத நிலையில், சிவராஜ் குமாரின் மனைவி கீதாவோ முழுக்க முழுக்க அரசியல் பின்புலம் கொண்டவராவார். அவரது தந்தை எஸ். பங்காரப்பா கர்நாடகா முன்னாள் முதலமைச்சராக இருந்தவராவார். பங்காரப்பாவின் மகன்களான மது பங்காரப்பா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்து, தற்போதைய தேர்தலில் சொரபா தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது சகோதரர் குமார் பங்காரப்பா பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், கீதா சிவராஜ் குமார் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இவர் கட்சியில் சேருவது தொடர்பாக பல்வேறு எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கிளம்பி வரும் நியில், தனது மனைவி காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு சிவராஜ் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனது மனைவியுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்று சிவராஜ் குமார் கூறியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.