முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை வைத்து திதி கொடுத்த கன்னட அமைப்புகள் : இழிவான செயலால் பெங்களூரில் பரபரப்பு!!

முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை வைத்து திதி கொடுத்த கன்னட அமைப்புகள் : இழிவான செயலால் பெங்களூரில் பரபரப்பு!!

காவிரியில் தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கி இருந்தது.

ஆனால் தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரைக் கூட தரமாட்டோம் என கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்குகின்றன. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசோ, காவிரியில் சொற்ப நீரைத்தான் திறந்துவிட்டுள்ளது.

காவிரியில் தமிழ்நாட்டுக்கான பங்கை திறந்துவிடக் கூடாது என கர்நாடகா பாஜக முதலில் போராட்டத்தைத் தூண்டிவிட்டது. இதனைத் தொடர்ந்து கன்னட விவசாய அமைப்புகள், கன்னடர் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. மண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர் பகுதிகளில் தொடர் ம்றியல், முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து பெங்களூரில் இன்று பல்வேறு கன்னட அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. பெங்களூர் பந்த் அறிவிப்பை முன்னிட்டு கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே விடுமுறை அறிவித்துவிட்டன. அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. பல இடங்களில் கடைகள், ஹோட்டல்கள் திறந்திருந்தன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. இத்தடையை மீறி பெங்களூர் நகரின் பல இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. தடையை மீறிய் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் உடனுக்குடன் அப்புறப்படுத்தி கைது செய்து வருகின்றனர்.

இப்போராட்டங்களின் போது கன்னட அமைப்பினர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை வைத்து இழிவான செயலை செய்தது அதிர்ச்சியைத் தந்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்துக்கு பொட்டு வைத்து மாலை அணிவித்து திதி கொடுத்தும் அவர் உருவப் படம் முன்பாக ஆண்களும் பெண்களும் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாட்டுக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் உருவப் படத்தை முன்வைத்து கன்னடர்கள் செய்த இந்த இழிசெயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த இழிசெயலை தடுக்காமல் பெங்களூரில் போலீசார் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததும் பெரும் வேதனைக்குரியதாகும்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

4 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

4 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

5 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

5 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

6 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

6 hours ago

This website uses cookies.