நடிகர் சித்தார்த்தை பேச விடாமல் விரட்டிய கன்னட அமைப்புகள் : மன்னிப்பு கேட்ட நடிகர் சிவராஜ்குமார்!!

நடிகர் சித்தார்த்தை பேச விடாமல் விரட்டிய கன்னட அமைப்புகள் : மன்னிப்பு கோரிய நடிகர் சிவராஜ்குமார்!!

காவிரி நதி நீர் பிரச்சனை தமிழகத்திற்கும், கர்நாடாகவிற்கும் பல ஆண்டுகாலமாக நீடித்து வருகிறது. இந்தநிலையில் இந்தாண்டு சரியான மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிந்தது. இதனால் காவிரியை நம்பி பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உருவானது.

இதனையடுத்து தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தருமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதனை கர்நாடக அரசு மறுத்து வந்தது. இதனையடுத்து தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அப்போது தமிழகத்திற்கு தண்ணீரை திறக்க உத்தரவிடப்பட்டது.

இதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவ படத்தையும் எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் பெங்களூரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து இன்று கன்னட அமைப்புகள் அறிவித்திருந்த பந்த் கர்நாடக முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் கர்நாடக பகுதிக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

எல்லை பகுதிகளில் நிறுத்தப்பட்டது. மேலும் இரு மாநில போலீசாரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர். இன்று அறிவிக்கப்பட்ட பந்த் காரணமாக பேருந்து சேவை பாதிக்கப்பட்டது. ஓட்டல்கள், திரையரங்குகள் மூடப்பட்டது. கர்நாடகவில் பல்வேறு பகுதிகளில் போராட்டமும் நடைபெற்றது. விமான சேவை செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கன்னட அமைப்பினர் கெம்ப கவுடா விமான நிலையத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழகத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். இதனையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிஆர்பிஎப் போலீசார் போராட்டக்காரர்களை அந்த பகுதியில் இருந்து குண்டுகட்டாக தூக்கி சென்று வெளியேற்றினர்.

இந்த நிலையில், கன்னட பிலிம் சேம்பர் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் கன்னட திரைப்பட நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர். கன்னட முன்னனி நடிகர் ஷிவ்ராஜ்குமார், ஶ்ரீநாத், ஸ்ருதி, உமாஶ்ரீ, ரகு முகர்ஜி, அனு பிரபாகர், விஜய் ராகவேந்திரா, முரளி, நீனசம் சதீஷ், பூஜா காந்தி, பாமா ஹரீஷ், அனிருத், பத்மா வசந்தி, ரூபிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது போராட்டத்தின் இடையே பேசிய ஷிவ்ராஜ்குமார், காவிரி விவகாரத்தில் நியாயமான முறையில் போராட வேண்டும். தமிழ் திரைப்பட நடிகர் சித்தார்தை செய்தியாளர் சந்திப்பில் இருந்து வெளியேற்றியது தவறு என் தெரிவித்தார். மேலும் காவிரி பிரச்சனைகளை தீர்க்கமாக எதிர்கொள்ள வேண்டும். வன்முறையில் ஈடுபடுவது தவறு என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?

பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…

12 minutes ago

பெண் ஆசிரியரை செருப்பால் அடித்த கல்லூரி மாணவி.. அதிர்ச்சி வீடியோ!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…

47 minutes ago

அப்போ எல்லாமே செட்டப்பா? உஷாராக பிளான் போட்ட கமல்ஹாசன்? இதான் விஷயமா?

பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…

1 hour ago

திடீரென வெளியான வீடியோ…அதிர்ச்சியில் உறைந்து போன பிரியா வாரியர்!!

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…

1 hour ago

பஸ் கண்டக்டருடன் உல்லாசம்.. ரகசிய வீடியோ : தப்பான சகவாசத்தால் விபரீதம்!

பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…

2 hours ago

ரெட்ரோ படத்தில் வடிவேலு? சீக்ரெட்டை போட்டுடைத்த இயக்குனர்? ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!

புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

2 hours ago

This website uses cookies.