காங்கிரசை விமர்சிக்கும் நோக்கில் கர்நாடகா பாஜக வெளியிட்ட வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், எஞ்சிய 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனிடையே, கர்நாடக மாநில பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில், இடஒதுக்கீடு மற்றும் நிதி ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இஸ்லாமியர்களுக்கே ஆதரவாக உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: பேக்கரியில் அடாவடி… ஊழியரை கண்முன் தெரியாமல் தாக்கிய போதை ஆசாமிகள் ; சைரன் சவுண்ட் கேட்டதும் எஸ்கேப்!!
இந்நிலையில், பா.ஜ.க. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. கலவரத்தைத் தூண்டி பகையை வளர்க்க பா.ஜ.க. விரும்புகிறது என தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, மாநில தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சர்ச்சைக்குரிய பதிவை நீக்குமாறு கர்நாடக பா.ஜ.க.விற்கு மாநில தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டார். ஆனால் அந்த பதிவு நீக்கப்படாததால், கர்நாடக பா.ஜ.க.வின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்குமாறு ‘எக்ஸ்’ தளத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.