ஓடும் பேருந்தில் ஜன்னல் கண்ணாடியை திறப்பதில் ஏற்பட்ட தகராறின் போது பெண்கள் மாறி மாறி செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் ஜன்னல் கண்ணாடியை தன் பக்கம் திறந்துள்ளார். இதனால், அந்தப் பெண்ணுக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணின் ஜன்னல் கண்ணாடி மூடியுள்ளது. இதனால், தன் பக்கம் ஜன்னலை திறந்து விடும்படி அவர் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
இதனால், இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இரு பெண்களும் மாறி மாறி செருப்பதால் தாக்கிக் கொண்டனர். இதனால், அதிர்ந்து போன சக பயணிகள், பேருந்தை நிறுத்தும்படி சத்தம் போட்டுள்ளனர். இதையடுத்து, பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், சண்டை போட்ட இரு பெண்களையும் பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டுள்ளார்.
பெண்கள் மாறி மாறி செருப்பால் தாக்கிக் கொண்ட இந்த சம்பவத்தை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
This website uses cookies.