கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளனர்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட இருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆதரவு இல்லாமல், பாஜக அல்லது காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்புகளில் சொல்லப்படுகிறது.
இதையறிந்த குமாரசாமி தனது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கத் தயார் என்று அறிவித்துள்ளார். அதாவது, ஐந்து வருடமும் நான் தான் முதல்வர், சுழற்சி முறையில் பதவி தர வேண்டும் என்று கேட்க கூடாது. முதல்வராக என்னை சுதந்திரமாக வேலை செய்ய விட வேண்டும். எனக்கு பிடிக்காத ஆட்களை அமைச்சராக்க சிபாரிசு செய்ய கூடாது. நீர்வளம், மின்சாரம், பொதுப்பணி துறைகள் என் கட்சிக்கு தான். ரெய்டு என்ற பெயரில் என் கட்சியினரை மிரட்ட கூடாது, என பல்வேறு கண்டிசன்களை போட்டுள்ளார்.
இந்த சூழலில், குமாரசாமியின் ஆதரவை பெற பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, 110 முதல் 120 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்களை ரெசார்ட்டில் தங்க வைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் 120 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால் ரெசார்ட் அரசியல் வேண்டாம் என்ற முடிவில் உள்ளனர். இதையடுத்து, ஓட்டு எண்ணிக்கையின் போது வெற்றி பெறும் வேட்பாளர்கள் உடனடியாக பெங்களூருவுக்கு வருவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேவேளையில், பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சியை தக்க வைப்பதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.