கர்நாடகாவில் கல்லூரி மாணவன் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள மணிப்பால் மாஹே பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சத்ய சுமன் (19) என்ற மாணவனும் படித்து வந்தார்.
அவருக்கு கடந்த 18ம் தேதி அவருக்கு தேர்வு நடைபெற்றது. இதற்காக அவர் தேர்வு எழுத அறைக்கு வந்துள்ளார். வினாத்தாளை பார்த்ததும், கவலை அடைந்த அவர், தேர்வறையில் இருந்து சட்டென வெளியே ஓடிச் சென்றார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில், 6வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேரதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை காப்பாற்ற ஓடிச் சென்றனர். ஆனால், தலையில் பலத்த காயம் அடைந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையில் மாணவர் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது வேறு ஏதேனும் காரணமா..? என்று விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவன் தற்கொலை செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.