கர்நாடகாவில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாசன் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அர்பிதா (23) என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 3 மர்ம நபர்கள், ஆசிரியை அர்பிதாவை காரில் கடத்திச் சென்றுள்ளனர். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், ஆசிரியை கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, அர்பிதா தங்களின் உறவினரான ராமு என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், தனது மகளை கடத்திச் சென்ற சம்பவத்தில் ராமுவுக்கு தொடர்பிருக்கலாம் என்று அர்பிதாவின் தாயார் சந்தேகம் தெரிவித்துள்ளார். இதனிடையே, கனகதாச ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஆசிரியை அர்பிதா ஏன் பள்ளிக்கு வந்தார்..? என்ற கேள்வியும் போலீசாரிடையே எழுந்துள்ளது.
எனவே, 3 தனிப்படைகளை அமைத்து, அர்பிதாவை மீட்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…
This website uses cookies.