கர்நாடகாவில் பள்ளி மாணவனுடன் நெருக்கம் காட்டி போட்டோசூட் நடத்திய ஆசிரியையை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
முருகமல்லா கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியை புஷ்பலதா, அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனோடு நெருக்கம் காட்டி போட்டோஷுட் நடத்தியுள்ளார்.
ஆசிரியையும், மாணவனும் முத்தமிட்டுக் கொள்வது, ஆசிரியையை மாணவன் தூக்கி வைத்திருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்தப் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.
ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவனின் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தலைமை ஆசிரியை புஷ்பலதாவை சஸ்பெண்ட் செய்து சிக்காபல்லாபூர் மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.