கர்நாடகாவில் சிகிச்சை அளிப்பதற்காக மயக்க ஊசி செலுத்திய கால்நடை மருத்துவரை, காட்டு யானை மிதித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹாசன் ஆலூரில் உள்ள வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த யானைக்கு அப்பகுதி மக்கள் பீமா என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த சூழலில், காட்டு யானை ஒன்றுடன் ஏற்பட்ட சண்டையில் பீமா யானைக்கு காயமடைந்தது. இதனால், வலியுடன் நடமாடி வந்த நிலையில், அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில், ஹள்ளியூரில் இருந்த பீமா காட்டு யானையை கண்டுபிடித்தனர். யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறை ஊழியர் வெங்கடேஷ், மயக்க ஊசி செலுத்தினார். அப்போது, திடீரென ஆவேசமான காட்டு யானை அவரை விரட்டிச் சென்று ஆக்ரோஷத்துடன் தாக்கி மிதித்தது. இதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்தை வனத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். காட்டு யானை பீமா, இதுவரை யாரையும் தாக்காத நிலையில், அதற்கு சிகிச்சையளிக்க முயன்ற வனத்துறை ஊழியரை தாக்கி கொலை செய்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.