கேரளா மாநிலம் காசர் கோட்டில் தாத்தா வீட்டிற்குள் ஓட்டி வந்த காரின் அடியில் சிக்கி 2 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் காசர்கோடை சேர்ந்தவர் நாசர். இவருக்கு சுமார் ஆறு மற்றும் இரண்டு வயதுடைய இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது மூத்த மகனும், 2 வயதான சிறுவனும் கடந்த வாரம் வீட்டின் முன் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த குழந்தைகளின் தாத்தா வீட்டிற்குள் காரை நிறுத்துவதற்காக வந்துள்ளார். இருவரும் சைக்கிளில் விளையாடி வந்த நிலையில், தனது தாத்தா காரை நிறுத்துவதற்கு வசதியாக, 5 வயது சிறுவன் தனது சைக்கிளை ஓரமாக நிறுத்தினான்.
அப்போது 2 வயது குழந்தை காரின் முன்னால் போய் நின்றதை கவனிக்காத தாத்தா, காரை முன்னால் எடுக்க முயற்சிக்க எதிர்பாராத விதமாக குழந்தை காரின் முன் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கியது. இதனைக் கண்ட 5 வயது சிறுவன் அலறியபடி ஓட முதியவரும் காரில் இருந்து இறங்கி ஓடி வந்தார். இந்நிலையில் பலந்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
தனது பேரக்குழந்தையை தாத்தாவே தவறுதலாக எதிர்பாராத விதமாக கார் ஏற்றிய சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்விபத்தானது கடந்த வாரம் நடந்துள்ளது. தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
ஓட்டப்பிடாரம் பகுதியில் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தையை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதையும் படியுங்க…
மதுபான ஊழல் புகாரை அமலாக்கத்துறை ஆளும் திமுக அரசு மீது வைத்துள்ள நிலையில், இது 2026 தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை…
இந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருகிறார் அமீர் கான். தற்போது ரஜினிகாந்த்துடன் கூலி படத்தில் முக்கிய ரோலில் நடித்து…
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது என எடப்பாடி பழனிசாமி…
This website uses cookies.