கேரள மாநிலம் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை கடந்த இரண்டு வாரங்களாக தீவிரம் அடைந்து இருந்தது. இந்த நிலையில், தொடர் கனமலையால் வயநாடு மாவட்டத்தில் சூரல்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில், ஏராளமான மலையடி வார கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தன. இரவு நேரத்தில் உறங்கியவர்கள் மண்ணுக்குள் புதைந்து மாய்ந்து போகினர்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நிலச்சரிவில், சிக்கி பலியானவர்களுக்கு வேண்டிய உதவிகளை அனைவரும் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி வீடு குடும்பத்தை இழந்தவர்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்வதாக கேரளா வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.
இது குறித்து, கேரள வாங்கி நிர்வாகம் சார்பில் கூறுகையில், வயநாடு மாவட்டம் சூரல்மலை பகுதியில் உள்ள கேரள வங்கி கிளையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடன் பெற்று இருந்தனர். தற்போது, ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ளனர்.
சிலர் குடும்பங்களை இழந்தும் வசித்து வந்த வீடுகளை இழந்தும் தவித்து வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில், உள்ளவர்கள் வங்கி கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி அறிவித்துள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.