கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம், தானூரை அடுத்த ஓட்டுப்புறம் தூவல் தீரம் பகுதியில், கடந்த மே மாதம் 8ம் தேதி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 குழந்தைகள் உள்பட 22 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விட, 40க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஒரு படகில் பயணம் மேற்கொண்டதால், பாரம் தாளாமல் இந்த விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக படகு உரிமையாளர் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், கோட்டயம் அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நிகழ்ந்துள்ளது. உதனாபுரம் பகுதியைச் சேர்ந்த சரத் என்பவர் உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, தனது குடும்ப உறுப்பினர்கள் 6 பேருடன் வைக்கம் நோக்கி படகில் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததில், சரத் மற்றும் அவரது சகோதரியின் மகன் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். எஞ்சிய 4 பேரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கேரளாவில் அடுத்தடுத்து படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.