ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு ரூ.2 ஆயிரம் நன்கொடை கேட்டு காய்கறி கடைக்காரரை காங்கிரஸ் நிர்வாகிகளால் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாரத் ஜோடோ யாத்ரா என்ற ஒற்றுமை நடைப்பயணத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, அண்மையில் கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம் முன்பு தொடங்கினார். இந்த யாத்திரையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.
12 மாநிலங்களை உள்ளடக்கிய கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான 3,500 கிமீ நடைபயணம் 150 நாட்களில் நிறைவடையும். தமிழகத்தில் தொடங்கிய இந்த யாத்திரை, தற்போது கேரளாவில் தொடரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எட்டாவது நாளாக இன்று கேரள மாநிலம் கொல்லத்தில் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் ‘பாரத் ஜோடோ யாத்திரையை’ மீண்டும் தொடங்கினர்.
இதனிடையே, கேரளாவின் கொல்லத்தில் காய்கறி கடை உரிமையாளரை மிரட்டி அவரது கடையை சில காங்கிரஸ் கட்சியினர் அடித்து நொறுக்கிய வீடியோ வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், ராகுல் காந்தியின் யாத்திரைக்கு நிதி வசூல் எனக் கூறி தன்னையும், உரிமையாளரையும் தாக்கியதாகவும், அவர்கள் 2,000 கேட்ட நிலையில், நான் ரூ.500 தான் கொடுக்க முடியும் எனக் கூறியதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
எனவே, அவர்கள் கடையில் இருந்த காய்கறிகளை தூக்கி எறிந்து அராஜகம் செய்ததுடன், காங்கிரஸ் தொண்டர்கள் தன்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும், கடையை சேதப்படுத்திய ஐந்து பேரில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் எச். அனீஷ் கானும் அடங்குவார் என்று பவாஸ் கூறினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளை உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
படத்தை கைவிட லைக்கா நிறுவனம் முடிவு நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய முழு கவனத்தையும் அரசியல்…
'திருப்பாச்சி' பட டைட்டிலின் சுவாரசியம் தமிழ் சினிமாவில் தற்போது படங்கள் கூட எடுத்திருலாம் போல,ஆனால் பட டைட்டில் வைப்பதில் மிகவும்…
ரஜினி பட டைட்டிலை யோசித்த படக்குழு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்,சமீபத்தில் இவருடைய…
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். உதயநிதி மற்றும்…
இயக்குநர் அட்லீ தமிழில் இயக்கிய படங்கள் அத்தனையும் ஹிட் அடித்தது. இதையடுத்து இடையில் எந்த படங்கைளையும் இயக்காத அவர் பாலிவுட்…
சினிமாவுக்காக உயிரை கொடுப்பவர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின்,படம் இயக்குவதை தாண்டி தற்போது பல படங்களில்…
This website uses cookies.