அரசின் கஜானா காலியாகிப் போனதாகவும், அமைச்சர்கள் பணத்தை கவனமாக செலவு செய்யுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே கேரள அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால், அமைச்சர்களுக்கு தொகுதி மேம்பாட்டுக்கான நிதிகளை வழங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படியிருக்கையில், பணப்பட்டுவாடா செய்யப்படாததால் பல்வேறு துறைகளின் பணிகள் பாதிக்கப்படுவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஓணம் பண்டிகையொட்டி அரசின் செலவுகள் இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், வருவாய் குறைந்துள்ளதால் நிதி நெருக்கடி நிலவுவதாகக் கூறிய முதலமைச்சர் பினராயி விஜயன், பணத்தை கவனமாக செலவழிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மாநிலத்தின் கடன் வரம்பை மத்திய அரசு உயர்த்தாததே இந்த நிதி நெருக்கடிக்கு காரணம் என்றும், ஓணம் முடிந்ததும் கஜானா காலியாகிவிடும் என்று அமைச்சர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.