திருவனந்தபுரம் ; கேரளாவில் கள்ளக்காதலனால் பிறந்த குழந்தையை பெற்ற தாயே கை, கால்களை வெட்டி கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருவனந்தபுரம் அருகே அஞ்சுதெங்கு கிராமப் பகுதியில் உள்ள கடற்கரையில் பிறந்த குழந்தையின் உடல் ஒன்று கை, கால்கள் உடைந்த நிலையில் ஒதுங்கியது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், குழந்தையின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், மீட்கப்பட்ட குழந்தையின் உடல், அஞ்சுதெங்கு பகுதியை சேர்ந்த ஜூலி என்ற பெண்ணின் குழந்தை என தெரியவந்தது.
இதையடுத்து, ஜுலியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பல திடுக்கிடும் தகவல் வெளியானது. 12 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த ஜூலிக்கு, அதே பகுதியை சேர்ந்த இளைஞரிடம் தகாத உறவு இருந்து வந்துள்ளது.
தகாத உறவின் மூலும் கர்ப்பம் தரித்து குழந்தை பிறந்ததாகவும், அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தால் அவதூறாக பேசுவார்கள் எனப் பயந்து, குழந்தையின் மூச்சை அடக்கி கொன்றது தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல், உயிரிழந்த குழந்தையின் கை, கால்களை உடைத்து, வீட்டிலேயே புதைத்ததும், 2 நாட்களுக்குப் பிறகு புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து கடற்பகுதியில் வீசியதும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, ஜூலியை போலீசார் கைது செய்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.