கேரளாவில் பழுதாகி கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்தில் மோதிய ஆட்டோ, தூக்கி வீசப்பட்டு சாலையில் ஆட்டோ ஓட்டுனர் சாலையில் உருண்டு ஓடிய பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா சாலையில் கல்லம்பலம் பகுதியில் உள்ள பக்கவாட்டு சாலையில் இருந்து வந்து கொண்டிருந்த ஆட்டோ ஒன்றின் பிரேக் திடீரென பழுதாகியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது பயங்கரமாக மோதி உள்ளது.
இந்த மோதலில் ஆட்டோவில் இருந்த ஓட்டுநர் சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து கல்லம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.