கேரளாவில் ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவரும் நோயாளியும் தமிழ் பாடல் பாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பரோக் பகுதியில் அரசு தாலுகா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வரும் முகம்மது ரயீஸ் என்ற மருத்துவர், 14 வயதான சிறுமிக்கு காலில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
அப்போது, சிறுமியிடம் வலி உள்ளதா என்று கேட்டார். வலிப்பதாக சிறுமி கூறியபோது, அவரை வலி மறந்து மனதை வருடும் வகையில், மருத்துவர் ஓர் தமிழ் பாடலை பாடினார்.
அர்ஜுன் நடித்த கர்ணா திரைப்படத்தில் வரும் மலரே மவுனமா என்ற பாடல் ஆகும். அந்த பாடலைக் கேட்ட அந்த சிறுமி, தனக்கும் அந்தப் பாடல் நன்கு தெரியும் என்பதால் அவரும் பாடினார். இருவரும் பாடிய காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.