கேரளாவில் ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவரும் நோயாளியும் தமிழ் பாடல் பாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பரோக் பகுதியில் அரசு தாலுகா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வரும் முகம்மது ரயீஸ் என்ற மருத்துவர், 14 வயதான சிறுமிக்கு காலில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
அப்போது, சிறுமியிடம் வலி உள்ளதா என்று கேட்டார். வலிப்பதாக சிறுமி கூறியபோது, அவரை வலி மறந்து மனதை வருடும் வகையில், மருத்துவர் ஓர் தமிழ் பாடலை பாடினார்.
அர்ஜுன் நடித்த கர்ணா திரைப்படத்தில் வரும் மலரே மவுனமா என்ற பாடல் ஆகும். அந்த பாடலைக் கேட்ட அந்த சிறுமி, தனக்கும் அந்தப் பாடல் நன்கு தெரியும் என்பதால் அவரும் பாடினார். இருவரும் பாடிய காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.