கேரளாவின் முதல் பெண் தபால்காரர் கே.ஆர்.ஆனந்தவல்லி முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
கேரளாவில் முதல் பெண் தபால்காரராக நியமனம் செய்யப்பட்டவர் கே.ஆர்.ஆனந்தவல்லி (வயது 90). இவரது கணவர் ராஜன். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களது மகன் தனராஜ்.
கே.ஆர்.ஆனந்தவல்லி ஆலப்புழா மாவட்டம் தத்தபள்ளி தபால் நிலையத்தில் முதன் முதலாக பெண் தபால்காரராக பணியில் சேர்ந்தார்.
பட்டதாரியான அவர், கேரளாவில் முதல் பெண் தபால்காரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து அவர் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பல்வேறு தபால் நிலையங்களில் தபால்காரர், அஞ்சலக அலுவலர் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டார்.
இதற்கிடையே கடந்த 1991-ம் ஆண்டு கே.ஆர்.ஆனந்தவல்லி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் அவர் ஆலப்புழாவில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் நேற்று முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் கே.ஆர்.ஆனந்தவல்லி தனது வீட்டில் மரணம் அடைந்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.