எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வரின் கார் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பெற்றோர்.
தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி முதல்வரின் கார் ஓட்டுநராக பணிபுரிபவர் ரஜினிகுமார்.
ஓட்டுநர் ரஜினி குமார் பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அதே பள்ளியில் எல்கேஜி படிக்கும் சிறுமி ஒருவரின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த பெற்றோர் அந்த சிறுமியை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி சோர்வாக காணப்பட்டார். அவரிடம் பெற்றோர் நடத்திய விசாரணையின் போது டிரைவர் ரஜினி குமார் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் கடந்த இரண்டு மாதமாக ரஜினி குமார் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் தெரிய வந்தது. இன்று காலை பள்ளிக்கு வந்த சிறுமியின் பெற்றோர் டிரைவர் ரஜினி குமாரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
டிரைவர் ரஜினி குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…
கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…
ட்ரெண்டிங் NO1-ல் குட் பேட் அக்லி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர்…
சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவர் சக சீரியல் நடிகரை திருமணம்…
உத்தரகாண்டில் டிஜிட்டல் அரஸ்டில் 18 நாட்கள் பேராசிரியர் சிக்கி 47 லட்சத்தை இழந்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
This website uses cookies.