அமைச்சருக்கு தொல்லை தந்த ஃபோன் கால்.. வெவ்வேறு எண்களில் இருந்து தொடர்ந்து குடைச்சல் : தூக்கம் கெட்ட அமைச்சர் எடுத்த முடிவு!!

யாரோ வாங்கிய கடனுக்கான தவணையை செலுத்த கூறி அமைச்சருக்கு தொல்லை கொடுத்த லோன் ஆப் நிர்வாகிகள் சென்னை அருகே கைதாகினர்.

ஆந்திர மாநில விவசாய துறை அமைச்சர் காக்காணி கோவர்தன் ரெட்டி. அமைச்சரின் தொலைபேசி எண்ணுக்கு இரண்டு நாட்களுக்கு முன் போன் செய்த நபர் ஒருவர் அசோக் என்பவர் எங்களிடம் ரூ. ஒன்பது லட்சம் கடன் வாங்கி இருக்கிறார்.

அதற்கு உரிய இந்த மாத தவணைத் தொகையாக ரூ 25 ஆயிரம் செலுத்த வேண்டும். அவர் உங்களுடைய நம்பரை கொடுத்தார். எனவே நீங்கள் 25 ஆயிரம் ரூபாய் தவணை தொகை செலுத்த வேண்டும் என்று கூறினார். தொலைபேசியை எடுத்து அமைச்சரின் உதவியாளர் அதுபோல் எங்களுக்கு யாரையும் தெரியாது என்று கூறி இருக்கிறார்.

ஆனாலும் விடாது கருப்பு என்பது போல் அந்த நபர் மீண்டும், மீண்டும் அமைச்சரின் தொலைபேசிக்கு போன் செய்து தொல்லை கொடுத்து இருக்கிறார். எனவே அந்த நம்பரை அமைச்சரின் உதவியாளர் பிளாக் லிஸ்டில் வைத்துவிட்டார்.

ஆனால் வேறு ஒரு நம்பரில் இருந்து மீண்டும் போன் செய்த அந்த நபர் தவணை தொகை 25 ஆயிரம் ரூபாய் உடனே செலுத்துங்கள் என்று கூறி இருக்கிறார். இதுபோல் சுமார் 50க்கும் மேற்பட்ட வெவ்வேறு எண்களில் இருந்து அமைச்சரின் செல்போனுக்கு அழைப்புகள் வந்துள்ளன.

இந்த தொல்லையை பொறுக்க முடியாத அமைச்சர் இது பற்றி நெல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த நெல்லூர் போலீசார், சென்னை அருகே உள்ள திருமங்கலத்தில் அலுவலகம் திறந்து அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பலருக்கு இது போல் தொல்லை கொடுத்த நபர்களை கூண்டோடு அள்ளி வந்து நெல்லூர் காவல் நிலையத்தில் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் லோன் ஆப்ப்களை ஒரு நபர் தன்னுடைய மொபைல் போனில் பதிவிறக்கம் செய்தால் அந்த மொபைல் போனில் காண்டாக்ட் லிஸ்டில் இருக்கும் அனைத்து எண்களும் அந்த லோன் ஆப் நிறுவனத்தின் கம்ப்யூட்டருக்கு சென்று விடும்.

இது போன்ற லோன் ஆப் நிறுவனங்களை நடத்தும் நபர்கள் புறநகர் பகுதிகளில் பெரிய ஹால் ஒன்றை வாடகைக்கு பிடித்து சக்திக்கு தகுந்தார் போல் 100 முதல் 300 பேர் வரை ஆட்களை பணிக்கு அமர்த்தி தங்களுக்கு கிடைத்த செல்போன் எண்கள் மூலம் அமைச்சர்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை பலருக்கு இதுபோல் போன் செய்து தொல்லைகளை கொடுத்து வருவது தெரியவந்துள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

9 minutes ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

23 minutes ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

2 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

2 hours ago

ரஜினியை வாடா என்று அழைத்த ஒரே காமெடி நடிகர்? அந்த அளவுக்கு கெத்தா இவரு?

சூப்பர் ஸ்டார் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை எவராவது நேரில் பார்த்தால் மரியாதை தானாக வரும் என்று…

3 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு சாவா? தூங்க சென்றவருக்கு 10 கடி… நடுங்க வைத்த ஷாக் சம்பவம்!

இரவு தூங்கச் சென்ற இளைஞர் அதிகாலையில் சடலமாக அறையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மீரட் பகுதியில்…

3 hours ago

This website uses cookies.