அமைச்சருக்கு தொல்லை தந்த ஃபோன் கால்.. வெவ்வேறு எண்களில் இருந்து தொடர்ந்து குடைச்சல் : தூக்கம் கெட்ட அமைச்சர் எடுத்த முடிவு!!

யாரோ வாங்கிய கடனுக்கான தவணையை செலுத்த கூறி அமைச்சருக்கு தொல்லை கொடுத்த லோன் ஆப் நிர்வாகிகள் சென்னை அருகே கைதாகினர்.

ஆந்திர மாநில விவசாய துறை அமைச்சர் காக்காணி கோவர்தன் ரெட்டி. அமைச்சரின் தொலைபேசி எண்ணுக்கு இரண்டு நாட்களுக்கு முன் போன் செய்த நபர் ஒருவர் அசோக் என்பவர் எங்களிடம் ரூ. ஒன்பது லட்சம் கடன் வாங்கி இருக்கிறார்.

அதற்கு உரிய இந்த மாத தவணைத் தொகையாக ரூ 25 ஆயிரம் செலுத்த வேண்டும். அவர் உங்களுடைய நம்பரை கொடுத்தார். எனவே நீங்கள் 25 ஆயிரம் ரூபாய் தவணை தொகை செலுத்த வேண்டும் என்று கூறினார். தொலைபேசியை எடுத்து அமைச்சரின் உதவியாளர் அதுபோல் எங்களுக்கு யாரையும் தெரியாது என்று கூறி இருக்கிறார்.

ஆனாலும் விடாது கருப்பு என்பது போல் அந்த நபர் மீண்டும், மீண்டும் அமைச்சரின் தொலைபேசிக்கு போன் செய்து தொல்லை கொடுத்து இருக்கிறார். எனவே அந்த நம்பரை அமைச்சரின் உதவியாளர் பிளாக் லிஸ்டில் வைத்துவிட்டார்.

ஆனால் வேறு ஒரு நம்பரில் இருந்து மீண்டும் போன் செய்த அந்த நபர் தவணை தொகை 25 ஆயிரம் ரூபாய் உடனே செலுத்துங்கள் என்று கூறி இருக்கிறார். இதுபோல் சுமார் 50க்கும் மேற்பட்ட வெவ்வேறு எண்களில் இருந்து அமைச்சரின் செல்போனுக்கு அழைப்புகள் வந்துள்ளன.

இந்த தொல்லையை பொறுக்க முடியாத அமைச்சர் இது பற்றி நெல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த நெல்லூர் போலீசார், சென்னை அருகே உள்ள திருமங்கலத்தில் அலுவலகம் திறந்து அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பலருக்கு இது போல் தொல்லை கொடுத்த நபர்களை கூண்டோடு அள்ளி வந்து நெல்லூர் காவல் நிலையத்தில் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் லோன் ஆப்ப்களை ஒரு நபர் தன்னுடைய மொபைல் போனில் பதிவிறக்கம் செய்தால் அந்த மொபைல் போனில் காண்டாக்ட் லிஸ்டில் இருக்கும் அனைத்து எண்களும் அந்த லோன் ஆப் நிறுவனத்தின் கம்ப்யூட்டருக்கு சென்று விடும்.

இது போன்ற லோன் ஆப் நிறுவனங்களை நடத்தும் நபர்கள் புறநகர் பகுதிகளில் பெரிய ஹால் ஒன்றை வாடகைக்கு பிடித்து சக்திக்கு தகுந்தார் போல் 100 முதல் 300 பேர் வரை ஆட்களை பணிக்கு அமர்த்தி தங்களுக்கு கிடைத்த செல்போன் எண்கள் மூலம் அமைச்சர்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை பலருக்கு இதுபோல் போன் செய்து தொல்லைகளை கொடுத்து வருவது தெரியவந்துள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரோகித்தின் மோசமான உலக சாதனை.. தீயான குல்தீப் யாதவ்.. திணறிய நியூசிலாந்து.. இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…

38 minutes ago

மனவருத்தம் இல்லை.. ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் பிரேமலதா அதிரடி பதில்!

ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…

2 hours ago

திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!

சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…

4 hours ago

கூட்டணி குறித்து கேட்டால் இதைச் சொல்லுங்க.. அதிமுகவிடம் எதிர்பார்ப்பு.. முக்கிய காய் நகர்த்தும் இபிஎஸ்

அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…

5 hours ago

வாய்க்காலில் கிடந்த சடலம்.. சிக்கிய நண்பர்கள்.. திருட்டால் பறிபோன உயிர்!

கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…

6 hours ago

மேட்ச் முடிவில் காத்திருக்கும் அதிர்ச்சி.. டாப் 3 வீரர்களின் நிலைப்பாடு என்ன?

இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…

7 hours ago

This website uses cookies.