லாரி மீது லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து : 4 பேர் பலி.. 4 பேர் படுகாயம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2024, 11:55 am
Lorry
Quick Share

தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் வைத்தியராம் கிராமம் அருகே இன்று அதிகாலை முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் மோதிய லாரியின் டிரைவர், கிளீனர் மற்றும் அதில் பயணித்த இரண்டு பேர் ஆகியோர் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தனர்.

மேலும் 4 பேர் விபத்தில் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலைகள் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Views: - 82

0

0