கடந்த திங்கட்கிழமை பெங்களூரில் நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர்பாக சூதாட்டம் நடத்திய 10 பேரை சைபராபாத் போலீசார் கைது செய்தனர்.
கடந்த திங்கள்கிழமை பெங்களூரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டி தொடர்பாக ஹைதராபாத்தில் பெருமளவில் சூதாட்டம் நடைபெறுவது பற்றிய தகவல் ஹைதராபாத் போலீசாருக்கு கிடைத்தது.
அதன் அடிப்படையில் ஹைதராபாத் புறநகர் பகுதியில் உள்ள சாய் அனுராக் காலனியில் உள்ள வீடு ஒன்றில் போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த 10 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 60 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், 5 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் வங்கி டெபாசிட், சூதாட்டம் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், செல்போன்கள், லேப்டாப்கள், டிவி ஆகிவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
ஐபிஎல் சூதாட்டத்தின் முக்கிய சூத்திரதாரியாக இருந்த விஜயவாடாவை சேர்ந்த பாண்டு தலைமறைவாகிவிட்ட நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.