உடன் படித்த பள்ளி மாணவியை கொலை செய்த சக மாணவனை போலீசார் கைது செய்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டம் உர்ஜாநகரில் ஆங்கிலவழி பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் 17 வயது மாணவன் பயின்று வருகிறார்.
அந்த மாணவனும் அதேவகுப்பில் பயிலும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, அந்த மாணவி தனது இன்ஸ்டாகிராமில் வெறொரு இளைஞருடன் பேசி வந்துள்ளார்.
இது குறித்து காதலனான மாணவனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவன் மிகுந்த ஆத்திரமடைந்தான். இந்நிலையில், கடந்த புதன்கிழமை மாலை மாணவி ஹோலி பண்டிகை கொண்டாட தனது நண்பர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
செல்லும் வழியில் அந்த மாணவியை அவரது காதலனான மாணவன் இடைமறித்துள்ளான். அப்போது, இன்ஸ்டாவில் வெறொரு இளைஞடன் பேசியதால் ஆத்திரமடைந்த காதலன் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் காதலியை சரமாரியாக தாக்கினார்.
இந்த கொடூர தாக்குதலில் அந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஹோலி பண்டிகை கொண்டாட சென்ற தனது மகள் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் வியாழக்கிழமை காலை மாணவியின் உடல் கிராமத்திற்கு அருகே உள்ள வயல்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டது.
மாணவி பிணமாக கிடந்த இடத்திற்கு அருகே மாணவியின் செல்போனும் அவரை கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு கம்பியும் கிடந்தன. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் மாணவியை கொலை செய்த 17 வயது மாணவனை கைது செய்தனர்.
மாணவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவன் சிறையில் அடைக்கப்பட்டான். இன்ஸ்டாகிராமில் வெறொரு இளைஞருடன் பேசியதால் காதலியை காதலன் அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
This website uses cookies.