தங்களின் 18 வயது மகளையும், அவரது காதலனையும் கொடூரமாக கொலை செய்து, முதலைகள் இருக்கும் ஆற்றில் இருவரின் சடலங்களையும் பெண்ணின் பெற்றோர் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மொரேனாவில் ரத்தன்பாசி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவானி தோமர் (18). இவர் அருகில் உள்ள பலுபு கிராமத்தைச் சேர்ந்த ராதிஷ்யம் தோமர் (21) என்னும் வாலிபரை காதலித்து வந்தார். ஷிவானியின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஜுன் 3ம் தேதி ராதிஷ்யமையும், ஷிவானியையும் காணவில்லை. இருவரும் வீட்டை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனால், ராதிஷ்யமின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
அதாவது, ஷிவானியின் தந்தையிடம் நடத்திய விசாரணையில், தனது மகளையும், அவரது காதலனையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கடந்த ஜூன் 3ம் தேதி இருவரையும் சுட்டுக் கொலை செய்து விட்டு, அவர்களின் உடலில் பெரிய கற்களைக் கட்டி, முதலைகள் நிறைந்த சம்பல் ஆற்றில் வீசியதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2000க்கும் மேற்பட்ட முதலைகள் இருக்கும் சம்பல் ஆற்றில் இருவரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.