ராய்பூரில் முக்கோணக் காதலால் இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தனுகுர்ரே (வயது 26) என்ற இளம்பெண் வேலைபார்த்து வந்தார். தனு குர்ரே கோர்பா மாவட்டத்தில் வசிப்பவர்.
தனுவை நவம்பர் 21 முதல் காணவில்லை. தனுவின் குடும்பத்தினர் நவம்பர் 22 அன்று ராய்பூரில் உள்ள பாண்ட்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் நவம்பர் 21ஆம் தேதி ஒடிசாவைச் சச்சின் அகர்வால் (வயது 28) என்பவருடன் பலங்கிருக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனுகுர்ரேவின் உடல் பாதி எரிந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பலங்கிர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.
தனுவின் பெற்றோர் மகளின் உடலை அடையாளம் காட்டியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் தனு சுட்டுக் கொல்லப்பட்டதும், பின்னர் அவரது உடல் எரிக்கப்பட்டதும் தெரியவந்தது.
தனு குரே கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சச்சின் அகர்வாலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட சச்சின் அகர்வால் நவம்பர் 19ஆம் தேதி ராய்ப்பூருக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது.
அதன் பிறகு அவர் தனு குர்ரேவுடன் ஒரு மாலில் சினிமா பார்த்துள்ளனர். படம் பார்த்துவிட்டு திரும்பி வந்ததும், பிலாஸ்பூரில் வசிக்கும் இளைஞரிடமிருந்து தனு குர்ரேவின் மொபைலுக்கு அழைப்பு வந்தது.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சச்சின் அகர்வால் தனுவை கொலை செய்து பலங்கிர் காட்டுபகுதிக்கு கொண்டு சென்று எரித்து உள்ளார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.