சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜிர் சம்பா பகுதியில் வசித்து வருபவர் சல்மான் அலி(53). இவருக்கு அலிஷா பர்வீன்(8), அலினா பர்வீன்(9) என 2 மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். 2 மகள்களையும் தமது பராமரிப்பிலேயே சல்மான் அலி வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று 2 பெண் குழந்தைகளுக்கும் பொம்மைக்காக சண்டை எழுந்துள்ளது. இதை பார்த்துக் கொண்டிருந்த சல்மான் அலி, ஒரு கட்டத்தில் கோபமடைந்து
இரு மகள்களையும் பெல்ட்டால் தாறுமாறாக அடித்து நொறுக்கி உள்ளார். தந்தையின் ஆக்ரோஷத்தை தாங்க முடியாமல் இருவரும் அலறி துடிக்க, சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர்.
சல்மான் அலியின் ஆவேச தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் 8 வயது மகள் அலிஷா பர்வீன் மயங்கி சரிந்தார்.2 சிறுமிகளையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அலிஷா பர்வீன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.மற்றொரு சிறுமியான அலினா பர்வீன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சல்மான் அலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…
தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…
பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…
அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…
This website uses cookies.