துப்பாக்கியுடன் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்… கத்தியை காட்டி மாணவர்களுக்கு மிரட்டல் ; திடீரென ஹீரோவான இளைஞர்… அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
26 April 2023, 9:19 pm

சென்னை ; மேற்குவங்கத்தில் வகுப்பறைக்குள் புகுந்து துப்பாக்கி காண்பித்து மாணவர்களை மிரட்டிய நபரை போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மால்டா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிக்குள் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்துள்ளார். அப்போது, வகுப்பறையில் இருந்த மாணவர்களை மிரட்டியுள்ளார். மேலும் அந்த நபர் ஆசிட் நிறைந்த பாட்டில்களையும் தனது கையில் வைத்திருந்ததால் மாணவர்கள் மிகவும் அச்சமடைந்தனர்.

பள்ளியில் ஏற்பட்ட பதற்ற நிலையை அறிந்து அங்கு ஏராளமான உள்ளூர் மக்கள் திரண்டனர். அப்போது, அவரிடம் சாதுரியமாக பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த ஆயுதங்கள், ஆசிட் பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ராஜு பல்லவ் என்பது தெரியவந்துள்ளது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், துணிச்சலாக செயல்பட்ட இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?