சென்னை ; மேற்குவங்கத்தில் வகுப்பறைக்குள் புகுந்து துப்பாக்கி காண்பித்து மாணவர்களை மிரட்டிய நபரை போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மால்டா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிக்குள் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்துள்ளார். அப்போது, வகுப்பறையில் இருந்த மாணவர்களை மிரட்டியுள்ளார். மேலும் அந்த நபர் ஆசிட் நிறைந்த பாட்டில்களையும் தனது கையில் வைத்திருந்ததால் மாணவர்கள் மிகவும் அச்சமடைந்தனர்.
பள்ளியில் ஏற்பட்ட பதற்ற நிலையை அறிந்து அங்கு ஏராளமான உள்ளூர் மக்கள் திரண்டனர். அப்போது, அவரிடம் சாதுரியமாக பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த ஆயுதங்கள், ஆசிட் பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ராஜு பல்லவ் என்பது தெரியவந்துள்ளது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், துணிச்சலாக செயல்பட்ட இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.