சென்னை ; மேற்குவங்கத்தில் வகுப்பறைக்குள் புகுந்து துப்பாக்கி காண்பித்து மாணவர்களை மிரட்டிய நபரை போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மால்டா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிக்குள் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்துள்ளார். அப்போது, வகுப்பறையில் இருந்த மாணவர்களை மிரட்டியுள்ளார். மேலும் அந்த நபர் ஆசிட் நிறைந்த பாட்டில்களையும் தனது கையில் வைத்திருந்ததால் மாணவர்கள் மிகவும் அச்சமடைந்தனர்.
பள்ளியில் ஏற்பட்ட பதற்ற நிலையை அறிந்து அங்கு ஏராளமான உள்ளூர் மக்கள் திரண்டனர். அப்போது, அவரிடம் சாதுரியமாக பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த ஆயுதங்கள், ஆசிட் பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ராஜு பல்லவ் என்பது தெரியவந்துள்ளது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், துணிச்சலாக செயல்பட்ட இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.